காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது

218 0
காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பாராமுல்லா மாவட்டத்தில் நாகா சோதனை சாவடி அருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்தவர், காவல்துறையினரை பார்த்து ஓடத் தொடங்கினான். எனினும், பாதுகாப்பு படையினர் அவனை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜாமியா காதீம் சோபோர் பகுதியை சேர்ந்த இஷ்பக் அகமது கன்னா என்பதும், அண்மையிலேயே தான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

Leave a comment