கோப்பாய் சம்பவம் – மேலும் இருவர் கைது 

219 0
யாழ்ப்பாணம் – கோப்பாய் காவற்துறை அலுவலர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.
காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 30ஆம் திகதி காவற்துறை அலுவலர்கள் இருவர் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment