எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம்

252 0

இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பரிசோதனையாளராக கடமையாற்றுகிறார்.

உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி யை குணப்படுத்தும் மருந்தை ரகித நாலந்த பாடசாலையில் கல்விப்பயிலும் காலத்திலேயே கண்டுப்பிடித்துள்ளார்.

Leave a comment