கொங்கோவில் கடும் மோதல் – 14 பேர் பலி 

2941 20

கொங்கோவில் அரசாங்கம் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல் காரணமாக 14 பேர் பலியாகினர்.

மத்திய ஆப்ரிக்க நாடான கொங்கோவில் ஜனாதிபதி ஜோசப் கபிலா தலைமையிலான ஆட்சி இடம்பெற்ற வருகின்றது.

ஜனாதிபதிக்கு எதிராக அந்த நாட்டில் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் கைது செய்து அடைக்கப்படுவதும், பின்னர் சிறைகளை உடைத்து அவர்கள் தப்பிப்பதும் அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், முக்கிய கிளர்ச்சிக் குழுவான பி.டி.கே., கின்ஷாசா நகரில் உள்ள சிறையை உடைத்து அங்குள்ள தனது ஆதரவாளர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது.

அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மோதல் கலவரமாக மாறிய நிலையில், கிளர்ச்சியாளர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதத்தில் இதே சிறையில் பி.டி.கே.,நடத்திய சிறை உடைப்பு சம்பவத்தில் இந்த குழுவின் தலைவர் உள்பட 4000 கைதிகள் தப்பித்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment