யாழ். சுண்ணாகம் பகுதியில் வாள்வெட்டு – இருவர் காயம்

239 0

யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் நேற்று இரவு இரண்டு பேர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுண்ணாகம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 21,23 மற்றும் 24 வயதுகளை உடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் நிலைமையும் பாரதூரமாக இருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான பல்வேறு வாள்வீச்சு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment