மொனராகலையில் இளைஞன் அடித்துக் கொலை

238 0

மொனராகலை – ஹலன்தாவ – தெற்கு வாவி சந்தி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவரே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் இல்லத்தில் நேற்று காலை நண்பர்கள் சிலர் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த விருந்துபசார நிகழ்வு மாலை வரையில் நீடித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இளைஞர் மாலையில் வீட்டின் முன்னால் வீழ்ந்த நிலையில் கிடந்துள்ளதை கண்ட பிரதேச மக்கள் அது குறித்து காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இளைஞனின் தாயார் பிற காரணங்களுக்காக வெளியே சென்றுள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment