பெங்களூர் சிறையில் கன்னடம் கற்கும் சசிகலா – ரூபா தகவல்

387 0
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கன்னடம் கற்றுவருவதாக முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா அளித்துள்ள பேட்டியில், ‘பரப்பன அக்ராஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் ‘நீங்கள் கன்னடம் கற்று வருவதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று கேடடதற்கு சசிக்கலாவும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன் என்று தெரிவித்தார் என ரூபா தெரிவித்துள்ளார்.

Leave a comment