மூளை இறந்துப்போன ஒருவரை வைத்து இலங்கை வைத்தியர்கள் மற்றுமொரு சாதனை

207 0

மூளை இறந்துபோன ஒருவரின் காலை, கால் இழந்த பிறிதொருவருக்கு பொருத்தி இலங்கையின் வைத்தியர்கள் வரலாற்று சாதனை செய்துள்ளனர்
ஏற்கனவே இந்த மாதிரி அவையவ பொருத்தல் உலகில் 10இடங்களில் இடம்பெற்றுள்ளது

எனினும் இலங்கையில் இதுவே முதல்தடவையாகும்
அநுரதபுரம் போதனா வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமையன்று தமிழரான வைத்திய நிபுணர் ஜோல் அருட்செல்வம் தலைமையில் இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஒரு காலை இழந்த 32 வயதான இளைஞனுக்கு முளை இறந்துப்போன 52 வயதானவரின் கால் பொருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மூளை இறந்துப்போனவரின் இரண்டு சிறுநீரகங்களும் கண்டி வைத்தியசாலைக்கு மாற்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

இதேபோல் விபத்தொன்றில் உயிரிழந்த இளைஞன் ஒருவரின் இதயத்தை மற்றுமொருவருக்கு பொருத்திய மற்றுமொரு வரலாற்று சாதனை அண்மையில் இலங்கையில் நிகழ்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment