மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

224 0

 யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது.

குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை நீத்த எனது மெய்ப்பாதுகாவலருக்கு செய்யும் கடமையாக நான் இதனை கருதுகிறேன்.

அந்த வகையில், குறித்த இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல பராமரித்து, அன்பு செலுத்தி, கல்வியை போதித்து, தான் இறக்கும்வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வேன் என இதன் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.

Leave a comment