மீராகுமாரை மாநிலங்களவை உறுப்பினராக தெர்வு செய்ய காங்கிரஸ் திட்டம் 

330 0

மேற்குவங்காள மாநிலத்தில் வெற்றிடமாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கு ஆகஸ்ட் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜூலை 28ஆம் திகதி கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில், மேற்குவங்காளத்தில் இருந்து மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி முன் மொழிந்துள்ளது.

முன்னதாக, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அதில் தோல்வியை தழுவிய போதும் மீராகுமார்  பெருவாரியான வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment