ரயில் விபத்தில் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

275 0

மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நேற்று இரவு வவுனியாவைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலே இவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாங்குளம் பகுதியிலுள்ள குஞ்சுக்குளத்தில் தனது உறவினரின் வீட்டிற்குச் சென்றிருக்கையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான மரியசெல்வன் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து நேர்ந்ததன் பின்னர் கனகராஜன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment