சிறப்பு அதிரடிப்படையினரின் சூட்டில் இளைஞன் பலி!

248 0

மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த நிலையில் அங்குவந்த சிறப்பு அதிரடிப்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதெனவும், இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக ஆற்றில் குதித்த இளைஞன் மரணமடைந்துள்ளதாகவும், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

17 வயதான மதுசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்த சிறுவனின் சகோதரரான 18 வயதான நிசாந்தன் என்பர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment