அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்

368 0

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் நண்பகல் கிளிநொச்சிக்கு சென்ற அவர் இரணைமடு இராணுவ தலைமையகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டில் நிலவிய கடும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Leave a comment