மட்டக்களப்பு – திராய்மடு இராணுவ முகாமுக்கு அருகில் இளைஞர் ஒருவர் தொடரூந்து மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் பாய்ந்து குறித்த இளைஞர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
25 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.