உமா ஒயா திட்டம் – நிவாரணங்கள் இல்லையேல் போராட்டம் வலுக்கும் என எச்சரிக்கை

322 0

உமா ஒயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நட்டஈடு மற்றும் வசதிகள் கிடைக்கப்பெறாவிடில் தமது போராட்டத்தை மேலும் வலுவாக்க வேண்டி வரும் என உமாஓயா செயற்திட்டத்திற்கு எதிராக மக்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

அந்த அமைப்பின் இணைப்பாளரும் ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமந்த வித்யாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தினால் பண்டாரவளை நகரத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment