டிசம்பர் வரைக்கும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்திருக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை 

378 0

டிசம்பர் மாதம் வரைக்கும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்திருக்குமாறுஇ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களிடம்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக மற்றும் கடற்றொழில் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்பதால்இ இந்த அரசாங்கத்தை 2020ம் ஆண்டு வரையில் கொண்டு செல்ல வேண்டும்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஒன்று கூடி தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் அடிப்படையில் செயற்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

Leave a comment