கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

249 0

கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய மாகாண ஆளுனர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கான உலர் உணவு கூப்பன் வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி தலைமையின் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

மத்திய மாகாணத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இந்த உலர் உணவு கூப்பன் மற்றும் போசனைப்பொதி வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் சில கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் கர்ப்பிணித்தாய்மார்களுக்காக தயார்செய்யப்பட்டிருந்த பகற்போசன விருந்திலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுனர் மார்சல் பெரேரா, வடமத்திய மாகாண ஆளுனர் பி பீ திசாநாயக்க, தென்மாகாண ஆளுனர் ஹேமக்குமார நாணயக்கார, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மத்திய மாகாண மகளிர் விவகார அமைச்சர் திலின பண்டார தென்னகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a comment