மகாசங்கத்தினரின் பொறுப்பில் உள்ள எந்தவொரு உடமையிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது

252 0
மகாசங்கத்தினரின் பொறுப்பில் உள்ள எந்தவொரு உடமையிலும் எவரும் ஆதிக்கம் செலுத்த இடமளிக்கப்படமாட்டாது என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
பௌத்த வணக்கஸ்தளங்களில் பெறப்படுகின்ற வருமானங்களை கைப்பற்றுவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
அத்தகையதான ஏதேனும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்பட்சத்தில் அந்த அரசியல்வாதிகள் அரசியல் களத்தில் இருந்தே ஒழிந்துபோகும் சூழல் தோன்றும் என ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment