தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக இறுதிகட்ட பேச்சு வார்த்தை நாளை மறுதினம்-மனோ கணேசன்

241 0
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பிரதமர் மற்றும் கட்சிய தலைவர்களின் கூட்டம் ஒன்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.இதன்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment