லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் வியாழக்கிழமை இறுதி தீர்மானம்

1158 0

கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காவற்துறை அதிகாரி தொடர்பில் நீதிமன்ற அறிக்கை கிடைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கி, தப்பிச் செல்ல ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment