சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

247 0

காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டின்சின் கேசல்கமுவ ஒயாவிற்கு அருகாமையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த, ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 அளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.

இதேவேளை, மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஜவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment