மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே உள்ளன – கிழக்கு முதலமைச்சர்

493 0

hafeez_0தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பில் நீர்கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போதைய மாகாண சபை முறைமையில் மக்கள் பிரதிநிதிகளால் காத்திரமான விடயங்களைச் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதில் வயதெல்லை குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவசரமாக சம்பந்தப்பட்வர்களை தொடர்பு கொண்டபோது அது மத்திய அரசின் நடவடிக்கை என்று பதில் கிடைத்தது.
வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணமாக கல்வியைப் பின்போட்ட மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியதன் காரணமாக வயதெல்லைகள் கூடிய பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரலில் உடனடியாக வயதெல்லையை மாற்றப்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டார்.