தலதா மாளிகையை உலகின் முதலாவது பசுமை புண்ணிய பூமி வலயமாக மாற்ற நடவடிக்கை

322 0
கண்டி –  தலதா மாளிகையை உலகின் முதலாவது பசுமை புண்ணிய பூமி வலயமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கமைய தலதா மாளிகை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை தடுக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படவுள்ளது.

Leave a comment