சிரியாவின் மருத்துவமனையின் மீது தாக்குதல் – 10 பேர் பலி

436 0

syria_2866384fசிரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 10 பொதுமக்கள் பலியாகினர்.
கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
குறித்த மருத்துவமனையில் மீது இரண்டு ஷெல்கள் வீழ்ந்துள்ளன.
சிரிய அரசாங்கமும் ரஷ்ய படைகளும் வேண்டுமென்ரே மருத்துவமனையின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சிரிய அரசாங்க எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்ப்பு குழுவே மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக சிரிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.