ஜெரூசலத்தில் துப்பாக்கி சூடு – இஸ்ரேலிய காவல்துறையினர் பலி

3783 0

ஜெரூசல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதல் சம்பவம் ஒன்றில் இரு இஸ்ரேலிய காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

இது தவிர மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேலிய அராபியர்கள் மூவர் பின்னர் இஸ்ரேலிய காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் முதல் இந்த பிரதேசத்தில் பல்வேறு தாக்குதல்கள் இடைக்கிடையே இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இது வரை எந்த குழுவும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment