விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சிக்க வில்லை – ரொபர்ட் ஓ ப்ளக்

395 0

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன், தமிழ் அகதிகள் குழு ஒன்றை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சித்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ ப்ளக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் படகுகளை மூழ்கடிப்பதற்கு அமெரிக்கா உதவியளித்ததாக வெளியாகியுள்ள தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் படகுகள் குறித்த தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு வழங்கினார்கள் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் அவர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment