என்னை சிறையில் அடைக்க சதி நடக்கிறது – சிவாஜிலிங்கம்

298 0

2017 ம் ஆண்டு மே மாதம் 8 ம் திகதி யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக 2 மாதங்களின் பின் விசாரணை நடத்தவேண்டிய தேவை என்ன? என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தன்னை சிறையில் அடைக்க சதி நடப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து நேற்று (13) காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்த மே மாதம் 8ம் திகதி யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக யாழ். மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் குற்ற புலனாய்வு துறையினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று 2 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் இந்த விசாரணைக்கான அழைப்பு வந்துள்ளது.

இது முதலமைச்சருக்கு எதிரான சதியில் முன் நின்றவர்கள் என்ற அடிப்படையில் எம்மை சிறைக்குள் தள்ளுவதன் ஊடாக முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்ப சதி செய்யலாம்.

இல்லையேல் தமிழர்களின் தலமைகள் என கூறிகொண்டிருப்பவர்கள் அரைகுறை அரசியலமைப்பை தமிழர்களுக்கு திணிக்க முயற்சிக்கையில் அதனை தமிழ் மக்களுடன் இணைந்து நாங்களும் எதிர்க்கலாம் என்னும் அடிப்படையில் எங்களை சிறைக்குள் தள்ளினால் அந்த பிரச்சினை எழாது என்பதற்காகவும் இந்த சதி நடக்கலாம்.

ஆனால் எங்கிருந்தாலும் நாம் மக்களுக்காக போராடுவோம் என்று எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Leave a comment