471 0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னர் அபிவிருத்தி செய்வதற்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை- சிவாஜிலிங்கம் (காணொளி)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னர் அபிவிருத்தி செய்வதற்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், முதலமைச்சர் நிதியம் நிறுவுவதற்கு, மத்திய அரசு முட்டுக்கட்டையாகச் செயற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐனாதிபதி செயலகத்தை முற்றுகையிடும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment