கொடிகாமத்தில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே மோதல்

260 0
கொடிகாமம் கண்டி வீதியில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதங்களால் கண்டிவீதியில் 10 நிமிடங்கள் போக்குவரத்து  ஸ்தம்பித்தது.
இன்று காலை 8.45 மணியளவில் யாழில் இருந்து வவுனியாவிற்கு சென்ற இ.போ.ச. பேரூந்தும் மற்றும்  தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் வீதி மறியலாக மாறியது.
இதனால் கொடிகாமம் கண்டி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது. பின்னர் இ.போ.ச சாரதியினால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் படி கொடிகாமம் பொலிஸாரின் முயற்சியால் பரந்தன் பகுதியில் வைத்து தனியார் பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment