அமைச்சர் தயாசிறியை குரங்கு என விமர்சித்த மலிங்கவுக்கு எதிரான விசாரணை!

250 0

விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை குரங்கு என விமர்சித்த, கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க மீது விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போனதால் இலங்கை அணி வீரர்களின் உடல்தகுதியை விமர்சித்து, அவர்களின் கிரிக்கெட் ஆயுள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர.

அதேவேளை, தொலைக்காட்சி ஒன்றில் மலிங்கா கூறிய போது, “நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களின் விமர்சனங்கள் பற்றி கவலையில்லை. குரங்குக்கு கிளியின் கூடு பற்றி என்ன தெரியும்? கிளியின் கூட்டுக்குள் சென்ற குரங்கு அதைப் பற்றி பேசுவது போல் உள்ளது என்று ஜெயசேகரவுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும் என்ற மலிங்காவின் இந்த உருவகம் மூலம் சாட சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜெயசேகர கூறுகையில், “நம் வீரர்களின் மோசமான உடல்தகுதியையே நாம் விமர்சித்தேன், மலிங்கவை குறிப்பிட்டு நான் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் பொதுவெளியில் என்னை அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

 

Leave a comment