வடக்கு மாகாண சபையின் வியாழக்கிழமை அமர்வை சுமூகமாக நடாத்துவதற்கு நடவடிக்கை- எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

6922 10

வடக்கு மாகாண சபையின் வியாழக்கிழமை அமர்வை சுமூகமாக நடாத்துவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார்.

நாளை காலை 10.30 மணிக்கு அமர்வு தொடர்பான கட்சித் தலைவர்களின் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு கூட்டமும், மாலை அமைச்சர் குழாமின் கூட்டமும் நடைபெறும் என்று எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.

Leave a comment