அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தால் சிறை செல்ல நேரிடும் – மஹிந்த அமரவீர

295 0

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு மன்னிப்பு கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வோர் எதிர்வரும் காலங்களில் சிறைக்குச் செல்ல நேரிடும் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தோரில் அரச அதிகாரிகள் சிலரும் உள்ளடங்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிலிபிட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மக்கள் பணத்தைக் கொள்ளையிட்ட சிலர் இன்னமும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment