இந்திய மீன்பிடி படகுகளை நிபந்தனையுடன் விடுவிக்க தீர்மானம்

217 0

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றத்தில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஒழுங்குமுறைக்கு அமைவாக படகுகளை விடுவிக்க தீர்மானித்திருப்பதாக அந்த அமைச்சில் நேற்று இடம்பெற்ற கடற்றொழில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக கடந்த ஆண்டு தொடக்கம் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நெகிழ்வான தீர்மானத்தின் படி முதலில் 2015ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 42 இந்திய மீன்பிடி படகுகளை விடுவிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

அவற்றை பொறுப்பேற்கும் படி இந்திய அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை விடுவிக்கப்படுவது மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த படகுகளை விடுவிப்பது தொடர்பாக வடக்கு மீனவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதுடன், நிபந்தனை அடிப்படையில் விடுவிப்பதற்கு அவர்கள் எழுத்துமூலம் உடன்பட்டிருப்பதகாவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துமீறும் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டமையினால், தற்போது இந்திய மீனவர்களின் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் நடவடிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

படகுகள் விடுவிக்கப்பட்ட போதிலும் அத்துமீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஒருபோதும் குறைக்க வேண்டாம் என்று கூறிய அமைச்சர் கைது நடவடிக்கையை விரிவுபடுத்துமாறும் கூறியுள்ளார்.

Leave a comment