இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்

284 0
இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகளின், நீதித்துறை சுயாதீனத் தன்மைக் குறித்த விசேட அறிக்கையாளர் டியாகோ கார்சியா சயன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 35 வது மனித உரிமைகள் பேரவை அமர்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
நீதித்துறையில் மொழியறியா விடயம் பெரும் பிரச்சினையாகும்.
நீதித்துறையில் பயன்படுத்தப்படும் மொழி தெரியாததன் காரணமாகவே பல தமிழர்கள் தண்டனைக்கு உள்ளாகும் நிலை காணப்படுகிறது.
அத்துடன் குற்றத்தை ஒப்புகொண்டால் தண்டனை குறையும் என்ற கருத்தை நம்ப வைக்கும் நடவடிக்கைகளையும் சட்டத்தரணிகள் மேற்கொள்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment