Laugfs Gas நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று சனிக்கிழமை (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று முதல் குறித்த எரிவாயு கையிருப்புகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் வீட்டு உபயோக நுகர்வோர் தமக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை Laugfs Gas முகவர்களிடமிருந்து வழமை போன்று கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

