தலங்கம – அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு

6 0

தலங்கம – அக்குரேகொட பகுதியில் இன்று (13) நடந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வாகன தரிப்பிடப் பகுதிக்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

9 குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய கணவன் ; மனைவி பலி!

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் கணவன் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீசியதில் மனைவி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மனைவி ஆவார்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவன் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வீட்டினுள் இருந்த மனைவி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.