தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துகேட்பு கூட்டத்தில் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் 16,500 ஊர்க் காவல் படை வீரர்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். இவர்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 15 நாட்களும், குறைந்தபட்சம் 10 நாட்களும் பணி வழங்கப்படுகிறது.

