சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் விசேட சந்திப்பு..! – நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை !

18 0

சுவிட்சர்லாந்து தூதரக ஏற்பாட்டில் நடைபெறவிருந்த சந்திப்புக்கு நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று நடந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட சந்திப்பு தமிழ் தேசிய பேரவையின் கூட்டம் காரணமாக காலவரையறை குறிப்பிடாது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இன்றைய தினம் சுவிஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு நேரடியாக இதனை கேட்டேன். அதை அவர்கள் முற்று முழுதாக மறுத்தார்கள்.

 

நாங்கள் அந்த முயற்சியை கைவிடவில்லை. அந்த செய்தி வெளிவருவதன் ஊடாக அதில் கலந்து கொள்ளும் தரப்புகளுக்கு பிரச்சினைகள் வருமோ என்ற ஒரே ஒரு சிந்தனையை தவிர வேறு எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை.

19ஆம் திகதிக்குரிய சந்திப்பு முயற்சிகள் தற்போது உறுதிப்படுத்த முடியாத இடத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. நான், சுவிஸ் அரசாங்கத்திற்கு கேட்டு இந்த முயற்சி மேற்கொண்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதுவும் தவறான கருத்

து. இலங்கை தமிழரசுக் கட்சியியினுடைய சுமந்திரன் தான் சுவிஸ்லாந்து தூதரகத்தை கேட்டு இந்த சந்திப்பை ஏற்படுத்தினார். அதே தரப்பு, 15ஆம் திகதி தமிழ் தேசியப் பேரவை குறிப்பாக நான் இது விடயம் சம்பந்தமான ஒரு கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பதாகவும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் காரணமாக இரண்டு கூட்டங்கள் அவசியம் இல்லை.

மேலும், தங்களுக்கு இது சம்பந்தமாக குழப்பமாக இருப்பதால் தங்களுக்கு உரையாடலில் கலந்து கொள்வது சம்மந்தமாக உறுதிப்படுத்த முடியாத என்ற கருத்தை சொல்லியிருந்தார்.

இதுவே உண்மை முற்றிலும் பொய்யான தகவல்

ஊடகங்கள் எங்களோடு தொடர்பெடுத்து இந்த கருத்தை கேட்டிருக்கலாம். நேரடியாக தூதரகத்தை கேட்டிருக்கலாம். அப்படி இல்லாமல் முற்று முழுதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை போட்டது எனக்கு கவலை ஏற்படுத்துகின்றது.

சுமந்திரனின் ஊதுகுழலாக ஒரு சில ஊடகங்கள் இருக்கலாம். அவர்கள் வெளியிட்டாலும் உத்தியோகபூர்வமாக எத்தனையோ தசாப்தங்களாக இயங்கி வருகின்ற ஊடகங்களும் கூட உண்மைக்கு முரணான எங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டது எமக்கு ஏமாற்றமாக உள்ளது.

 

ஊடகங்கள், ஊடகங்களில் இருக்கக்கூடிய அனைத்து வடகிழக்கை சார்ந்த ஊடகவியலாளர், ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் நாங்கள் தொடர்ச்சியாக வெளிப்படைத்தன்மையுடன் சந்திப்புகளை செய்து வருகிறோம்.

ஊடகவியலாளர்களையும் சிவில் சமுகமாகவே கருதுகிறோம். அனைத்து தரப்பையும் இப்போது ஒரே புள்ளியில் சந்திக்கும் வகையில் அரசியலமைப்பு விவகாரதத்தை கையாளும் விதத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடந்த கையோடு சொல்லி வருகின்றோம்.

தமிழரசுக்கட்சி செய்த சதி

இந்த விடயங்களை ஊடகங்களுடன் கதைத்தது போன்று சிவில் சமூக அமைப்புகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

அதே நேரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடனும் பேசுவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சி குழப்பபட்டது.

 

இந்நிலையில், 19ஆம் திகதி சந்திப்புக்கு எந்த விதத்திலும் நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை. 15ஆம் திகதி நாங்கள் நடத்தப் போகும் இந்த சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடத்தில் தான் அவசர அவசரமாக இந்த சந்திப்பை நிறுத்துவதற்கு 19 சந்திப்புக்கு இவர்களை சந்திக்க தயார் என்று சொல்லப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் சிவில் சமூகத்தை குழப்பும் நோக்கத்துடன் பொய்யான கருத்துகளை பரப்புவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி செய்த ஒரு சதியாகவே இதை பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.