இ – 20 உலகக் கிண்ண விலகலில் பங்களாதேஷுக்கு தண்டமில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை

8 0

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்தமைக்காக பங்களாதேஷ் தண்டிக்கப்படாதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் இணைந்து 2031 ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்பதாக பங்களாதேஷுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடரொன்று வழங்கப்பட்டுள்ளது.