தெஹிவளை பகுதியில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று புதன்கிழமை (04) தெஹிவளை பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே அவை கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 03 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

