“ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக நியாயம் கேட்டதால் மக்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் அவையில் பேச முற்பட்டபோது ஆளும் கட்சியினர் அவரை பேசவிடாமல் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து பேச முற்பட்டபோது அவரை பேசவிடாமல் ஆளும் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை பேசுமாறு சபாநாயகர் அழைத்தார்.

