பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் டிடிபி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் டிடிபி அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதாகவும், ஜனவரி 23-க்குள் திரா பகுதியை விட்டு வெளியேறுமாறும் மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

