“ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் சுயமரியாதையோடு இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வைத்திலிங்கம் உள்ளத்தில் இருந்திருக்கிறது. எனவே லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக அவர் வந்திருக்கிறார்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10,000 பேர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், “ இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருப்பவர்களை தலைமைக் கழகத்தின் சார்பில் நான் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

