பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரிவேந்தரை அனுமதிக்க மறுத்த போலீஸார்

17 0

பிரதமர் மோடி​யின் பொதுக்​கூட்​டத்​தில் பங்கேற்க வந்த ஐஜேகே நிறு​வனர் பாரிவேந்​தர் காரை மறித்த போலீஸார், அவரை அனு​ம​திக்​க​வில்​லை. இதனால், பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​காமல் பாதி​யிலேயே திரும்​பிய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

மது​ராந்​தகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட கூட்​டணி கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​வதற்​காக கூட்​டணி கட்​சித் தலை​வ​ரான இந்​திய ஜனநாயக கட்​சி​யின்​(ஐஜேகே) நிறு​வனத் தலை​வர் பாரிவேந்​தர், கட்​சி​யின் தலை​வர் ரவி பச்​ச​முத்து ஆகியோர் வந்​தனர். விழா மேடைக்கு சுமார் 800 மீட்​டர் தொலை​விலேயே அவர்​களது காரை காவல்​துறை​யினர் தடுத்து நிறுத்​தினர்.

தங்​களிடம் முறை​யான நுழைவுச் சீட்​டு​கள் இருப்​பதை சுட்​டிக்​காட்​டி​யும், காவல்​துறை​யினர் அவர்​களை உள்ளே அனு​ம​திக்க மறுத்​த​தாக கூறப்​படு​கிறது. மதி​யம் 2.30 முதல் 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக பாரிவேந்​தரும், ரவி பச்​ச​முத்​து​வும் காரிலேயே காத்​திருந்​தனர்.

அதி​காரி​களிடம் பலமுறை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் எந்​தப் பலனும் கிடைக்​க​வில்​லை. காவல்​துறை​யின் பிடி​வாத​மான போக்​கால் அதிருப்​தி​யடைந்த இரு​வரும், பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​காமல் அங்​கிருந்து திரும்​பிச் சென்​றனர். ஆனால், ஐஜேகே பொதுச் செய​லா​ளர் சண்​முகம் உள்​ளிட்ட மற்ற நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் கலந்​து​கொண்​டனர்.

போலீஸாரே காரணம்: இதுகுறித்து ஐஜேகே நிர்​வாகி​கள் கூறும்​போது, “பிரதமர் பங்​கேற்​கும் கூட்​டத்​துக்கு உரிய ஆவணங்​களு​டன் வந்த எங்​கள் கட்​சித் தலை​வர்​களை போலீஸார் வேண்​டுமென்றே தடுத்து நிறுத்​தி​யுள்​ளனர். ஒரு மணி நேரம் காத்​திருந்​தும் அனு​மதி கிடைக்​காதது வருத்​தமளிக்​கிறது. இதற்கு காவல்​துறையே முழுபொறுப்​பு ” என்​றனர்.