இந்தியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

22 0

இந்தியாவின் லே-லடாக் பகுதியில் இன்று காலை 11:51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் பகிர்ந்து கொண்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இத்தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலநடுக்கத்தின் மையம் 36.71° வடக்கு மற்றும் 74.32° கிழக்கில் 171 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.