சிலாபம் – வெல்ல பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 44 வயதுடைய இரு மீனவர்களே காணாமல்போயுள்ளனர்.
மீனவர்கள் இருவரும் மீன்பிடி தொழிலுக்காக சிலாபம் – வெல்ல பகுதியில் இருந்து கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் இருவரும் சென்ற படகு கடலில் மிதப்பதை கண்ட மற்றுமொரு மீன்பிடி படகு, மீனவர்கள் இருவரும் காணாமல்போயுள்ளதை அறிந்து தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் கடற்படை மற்றும் மீன்பிடி திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

