நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மது அருந்துவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
அவர்களில், 34.8 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், அதேநேரம் 0.5 சதவீதத்திற்கும் மிகக் குறைவான அளவில் பெண்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, நாட்டின் மொத்த மதுபான பயன்பாடு சுமார் 10 சதவீதமாகும். எமது நாட்டில் ஒட்டுமொத்த மது பயன்பாட்டைப் பார்த்தால், அது மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
அன்மைய காலகட்டத்தில், குறிப்பிடத்தக்க போக்கு சட்டவிரோத மது பயன்பாட்டின் கூர்மையான அதிகரிப்பு ஆகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, சுமார் 10சதவீத மது பயன்பாடு சட்டவிரோதமானது. சட்டவிரோத மதுவால் 5-6 பேர் உயிரிப்புகள் பவிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், இன்று, வியாழக்கிகிழமை மது தினமும் சுமார் 50 பேரைக் கொல்வதாவவும். அவர் குறிப்பிட்டுள்ளார்.

