எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்

25 0

வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வருகின்றனர்  இவ் கடற்கரையானது பாதுகாப்பு இன்றி காணப்படுவதால் கடல் பரப்புக்குள் இறங்க வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகள் அறிவித்துள்ளது.

இருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்கி நீராடுவதை காணக்கூடியதாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (4) அன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகள் மது போதையில் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று நீராடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர்

இதனை அவதானித்த ஊர் மக்கள் கடலின் தன்மை தொடர்பாக அவர்களுக்கு கூறிய போதும் அதை செவிமடுக்காமல் நீராடியுள்ளனர்

இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸூக்கு அறிவித்த போது அவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளிடம் கூறிச் சென்றுள்ளார்