காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது

30 0

தமிழக மீனவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை நடவடிக்கையால் பெரிதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன. அந்த வகையில் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக ஏராளமான படகுகளில் புறப்பட்டு சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் வகையில் படிப்படியாக நகர்ந்த வண்ணம் இருந்த சூழலில், திடீரென இலங்கை கடற்படை வந்து சேர்ந்தது.

 

 

 

அப்போது படகுகளை சூழ்ந்து கொண்டு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். இதையடுத்து சுற்றி வளைக்கப்பட்ட படகுகளில் இருந்த 11 மீனவர்களை கைது செய்தனர். அவர்களை தங்கள் படகுகளில் ஏற்றிக் கொண்ட இலங்கை கடற்படை அந்நாட்டு துறைமுகத்திற்கு அழைத்து சென்றது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்