புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை எதிர்த்து சிஐடியு சாலை மறியல் போராட்டம்: 15 ஆயிரம் பேர் கைது

15 0

புதிய தொழிலாளர் சட்​டத்​தொகுப்​பு​களை திரும்​பப்​பெற வலி​யுறுத்தி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்​களில் சிஐடியு தொழிற்​சங்​கத்​தினர் சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்ட 15 ஆயிரம் பேர் கைது செய்​யப்​பட்​டனர். மத்​திய அரசின் புதிய தொழிலாளர் சட்​டத்​தொகுப்​பு​களை திரும்​பப்​பெற வலி​யுறுத்தி சிஐடியு தொழிற்​சங்​கம் சார்​பில் தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்​களில் நேற்று சாலை மறியல் போராட்​டம் நடை​பெற்​றது.

மொத்​தம் 72 இடங்​களில் போராட்​டம் நடந்​தது. சென்னை கிண்​டி​யில் நடை​பெற்ற போராட்டத்​துக்கு சிஐடியு மாநில பொதுச்​செய​லா​ளர் எஸ்​.கண்​ணன் தலைமை தாங்​கி​னார். அதே​போல் அண்ணா சாலை​யில் அகில இந்​திய துணைத் தலை​வர் அ.சவுந்​தர​ராசன் தலைமை வகித்​தார்.

இதுத​விர மின்ட், அம்​பத்​தூர் பகு​தி​களி​லும் மறியல் நடை​பெற்​றது. போராட்​டங்​களில் ஈடு​பட்​ட​வர்​களை போலீ​ஸார் கைது செய்து ஆங்​காங்கே உள்ள திருமண மண்​டபங்​களில் அடைத்​தனர். பின்​னர் மாலை​யில் அவர்​களை விடு​தலை செய்​தனர்.

அந்​த வகை​யில் சென்​னை​யில் நடந்த போராட்​டங்​களில் 1000-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர். தமிழகம் முழு​வதும் சாலை மறியலில் ஈடு​பட்ட 15,000-க்​கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

போராட்​டம் குறித்து பொதுச்​செய​லா​ளர் எஸ்​.கண்​ணன், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொழிலாளர் விரோத நடவடிக்​கைகளை எடுத்து வரும் பாஜக அரசு, பின்​பற்​றக்​கூடிய பாசிச, தாராளமய பொருளா​தார கொள்​கை​யின் வெளிப்​பா​டாக இந்த தொழிலாளர் சட்​டத்​தொகுப்​பு​களை அமலாக்​கி​யுள்​ளது.